Sunday, April 12, 2015

சூர்யா மீது வழக்கு தொடரப் போவதாக இந்தி நடிகர் மிரட்டல்!

By
வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் சூர்யா நடித்தார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதையடுத்து ‘24’ என்ற தலைப்பில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். விக்ரம்குமார் இந்த படத்தை இயக்குகிறார். இவர் ‘யாவரும் நலம்’ என்ற பேய் படத்தை எடுத்து பிரபலமானவர்
சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர் டெய்ன்மென்ட் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியுள்ளது. இதற்காக சூர்யாவும், சமந்தாவும் அங்கு முகாமிட்டு நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சூர்யா படத்துக்கு 24 என்ற தலைப்பை வைப்பதற்கு இந்தி நடிகர் அனில்கபூர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ‘24’ என்ற தலைப்பில் ஏற்கனவே அமெரிக்கன் டி.வி. தொடர் தயாராகி வெளிநாடுகளில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.
இதை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை அனில் கபூர் வாங்கி இருக்கிறார். டி.வி. தொடர் தலைப்பும் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பும் ஒரே மாதிரி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
இதுகுறித்து அனில்கபூர் கூறும்போது, ‘24’ என்ற தலைப்பை சூர்யா படத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மீறி பயன்படுத்தினால் சூர்யா மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

0 comments:

Post a Comment