மும்பையில் உள்ள கண்டிவில் பகுதியில் வசித்து வரும் 64 வயது தந்தை ஒருவர், தனது மனைவி, குழந்தைகளுடன் சாலையோர நடைபாதையில் வசித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் கிழமை இரவு 2 மணிக்கு அனைவரும் தூங்கிய பிறகு அவர் தனது 23 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் அவரிடம் இருந்து இளம்பெண்ணை மீட்டுள்ளனர். மேலும் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். . வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சங்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்த பெண் எங்களிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், இது போன்று பலமுறை தனது தந்தையால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், இது குறித்து வெளியில் தகவல் சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளார்” என்றார்.
0 comments:
Post a Comment