Sunday, April 12, 2015

விமானத்தில் ஆந்திர மந்திரியுடன் தகராறு செய்த சுருதிஹாசன்!

By
விஜய் ஜோடியாக ‘‘புலி’’ படத்தில் சுருதிஹாசன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி அருகே உள்ள தலைக்கோணை நீர்வீழ்ச்சி பகுதியில் நடந்து வருகிறது. ரூ.1 கோடி செலவில் அரங்குகள் அமைத்து காட்சிகளை எடுக்கின்றனர். அப்பகுதியில் முகாமிட்டு சுருதிஹாசன் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் இருந்து ஒருநாள் ஓய்வு எடுத்து திருப்பதி செல்ல திட்டமிட்டார். ஐதராபாத் சென்று அங்கிருந்து விமானத்தில் திருப்பதி புறப்பட்டார். அதே விமானத்தில் ஆந்திர மந்திரி ஒருவரும் பயணமானார். சுருதிஹானுக்கு முன் வரிசையில் ‘சீட்’ ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர் அருகிலேயே மந்திரியும் அமர்ந்து இருந்தார்.
அந்த மந்திரி மொபைல் போனில் சத்தமாக பேசிக் கொண்டு இருந்தார். இதை சக பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. சுருதிஹாசனுக்கும் தொந்தரவாக இருந்தது. போனை சுவிட்ச் ஆப் செய்யும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் மந்திரி கேட்கவில்லை. சுருதியை ஏளனமாக பார்த்தபடி தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். இது அவரை மேலும் கோபமூட்டியது. தொந்தரவாக உள்ளது போனை சுவிட்ச் ஆப் செய்யுங்கள் என்று சத்தம் போட்டார். அத்துடன் விமான பணிப்பெண்களையும் அழைத்து புகார் செய்தார். இதையடுத்து மந்திரிக்கும் சுருதிஹாசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. விமான பணிப் பெண்கள் மந்திரியிடம் வற்புறுத்தி போனை சுவிட்ச் ஆப் செய்ய வைத்தனர்.
- See more at: http://tamilcloud.com/cinema/andhra-minister-with-shrutihasan/#sthash.9X2B3jgZ.dpuf

0 comments:

Post a Comment