Saturday, April 11, 2015

23 பேர் கொண்ட கொள்ளைக்குழு சிக்கியது: ஒருவர் கல்யாணராமன்!

By
மாணிக்கக்கல் வர்த்தகர்கள் உட்பட செல்வந்தர்களின் வீடுகளில் கடந்த ஆறுமாதங்களாக தங்களுடைய கைவரிசையை காண்பித்து வந்த 23 பேரை கொண்ட குழுவை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பலாங்கொட போவத்தையில் உள்ள மாணிக்கக்கல் வர்த்தகரின் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனுக்கு கிடைத்ததை அடுத்து அவை தொடர்பில் விசாரணைகள் பொலிஸ் அ
த்தியட்சகர் மேவன் சில்வாவின் ஒருங்கிணைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில் அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரும் அடங்குகின்றார்.
கிரிபத் கொட, வாத்துவ, அம்பலாங்கொட , ஹொரணை, ஜா-எல போன்ற பிரதேசங்களில் துப்பாக்கிகளை காட்டி அச்சுறுத்தி பணம், மாணிக்கற்கள், தங்க ஆபரணங்களை இவர்கள் கொள்ளையிட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.
கொள்ளைக் குழுவின் உறுப்பினர்கள் 6 பேர் எனவும் 17 பேர் அவர்களின் உதவிக்கு செல்லும் நபர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்களில் ஒருவருக்கு 11 மனைவிகள் இருப்பதாகவும் கொள்ளையில் ஈடுபட்ட பின்னர் இவர்கள் இந்தியாவுக்கு மூன்று வார பயணத்தை மேற்கொள்ளும் பழக்கத்தை கொண்டிருந்தனர் எனவும் தெரியவந்துள்ளது.

0 comments:

Post a Comment